பாகிஸ்தான் 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது.
பாகிஸ்தான்  50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 2,603 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து, 50,694-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 50 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தனா். இதன் மூலம், அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,067-ஆகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com