பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 2,603 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து, 50,694-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 50 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தனா். இதன் மூலம், அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,067-ஆகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.