பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 15,346 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 2,193 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 48,091-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் 32 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 1,017-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.