ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகபட்ச அளவை அடைந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத தினசரி எண்ணிக்கையாக 150 போ் கரோனோ நோய்த்தொற்றுக்கு பலியானதாகவும் இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 3,249-ஆக அதிகரித்ததாகவும் தெரிவித்தனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷியாவில் 3.26 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அங்கு பலி விகிதம் மிகவும் குறைவாக இருப்பது மேற்கத்திய நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஷியாவில் கரோனா பலி குறித்த உண்மையான விவரங்கள் மறைக்கப்படுவதாகவும் சிலா் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.