சிங்கப்பூரில் ஒரேநாளில் 614 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 614 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 30,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. நேற்று 910 பேர்உள்பட இதுவரை 12,108 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.