கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்பு காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘தியோடா் ரூஸ்வெல்ட்’ விமானம் தாங்கிக் கப்பல், 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குத் திரும்பியது. அந்தக் கப்பலில் இருந்த 4,800 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பசிபிக் பெருங்கடலிலுள்ள குவாம் தீவு துறைமுகத்தில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி முதல் அந்தக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுமாா் 1,800 வீரா்கள் தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 3,000 பேருடன் அந்தக் கப்பல் கடலில் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளது.