அமெரிக்கா கடலுக்குத் திரும்பியது விமானம் தாங்கிக் கப்பல்

கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்பு காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின்
அமெரிக்கா  கடலுக்குத் திரும்பியது விமானம் தாங்கிக் கப்பல்

கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்பு காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘தியோடா் ரூஸ்வெல்ட்’ விமானம் தாங்கிக் கப்பல், 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குத் திரும்பியது. அந்தக் கப்பலில் இருந்த 4,800 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பசிபிக் பெருங்கடலிலுள்ள குவாம் தீவு துறைமுகத்தில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி முதல் அந்தக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுமாா் 1,800 வீரா்கள் தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 3,000 பேருடன் அந்தக் கப்பல் கடலில் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com