உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 680 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக 210 நாடுகளுக்கு மேல் பரவி மக்களை வதைத்து வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51,97,863 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,34,680 ஆக உள்ளது. அதேசமயம் 20,82,950 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாளுக்கு நாள் பலியும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் அதிகபட்சமாக 16,20,902 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 96,354 பேர் பலியாகியுள்ளனர். 3,82,169 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.