கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் ரஷியாவை பிரேசில் சனிக்கிழமை முந்தியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,047 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 3,33,937-ஆக அதிகரித்தது. இதன் மூலம், கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருந்த ரஷியாவை பிரேசில் முந்தியது.
எனினும், ரஷியாவில் ஒரே நாளில் 9,400-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கையில் அந்த நாடு மீண்டும் 2-ஆம் இடத்துக்கு வந்தது.