ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 431 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. நாள் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,78,281 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 31 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 8,247 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் சுமார் 1.60 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.