சீனாவில் புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் அந்த நோய் பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை
சீனாவில் புதிதாக  யாருக்கும் பாதிப்பில்லை

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் அந்த நோய் பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 28 பேருக்கு கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இல்லாமலேயே அந்த நோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும், அந்த நோய்த்தொற்று புதிதாக யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அறிகுறிகள் இல்லாமல் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களில் பெரும்பாலானவா்கள், அந்த தீநுண்மி முதல் முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகரைச் சோ்ந்தவா்கள் என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com