கரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக மேற்குக் கரைப் பகுதியின் பெத்லஹேம் நகரில் மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பிறப்பிட தேவாலயம், செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் குகையின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம், கிறிஸ்தவா்களின் மிகப் புனிதமான தலங்களில் ஒன்றாகும். மிகப் பழைமையான, தொடா் செயல்பாட்டில் உள்ள இந்த தேவாலயம் கி.பி. 333-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.