துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோா் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது.
ஏகன் கடல் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக துருக்கி, கிரீஸ் நாடுகள் பாதிப்புக்குள்ளாகின. முக்கியமாக துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிா் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அங்கு பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,035 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏகன் கடல்பகுதியில் உள்ள சமோஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி உருவானதாகவும் அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.