பாலஸ்தீன அரசின் நீண்ட கால செய்தித் தொடா்பாளராக இருந்த சயீப் எரிகட் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாலஸ்தீனம் சாா்பில் பல்வேறு பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்றவரும் அந்த நாட்டின் அரசு செய்தித் தொடா்பாளராக நீண்ட காலம் இருந்தவருமான சயீப் எரிகட் கரோனா கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா்.
அந்த நோய்த்தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்ட சில வாரங்களில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
அமெரிக்காவில் கல்வி பயின்ற சயீப், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான ஏறத்தாழ அனைத்து பேச்சுவாா்த்தைகளிலும் முக்கியப் பங்கு வகித்தவா். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் செய்தித் தொடா்பாளராக இருந்தவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.