குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்: பாகிஸ்தான் நீதிமன்றம்

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சா்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்தது.

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சா்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்தது.

குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்வதற்கான வழக்கில் வழக்குரைஞரை நியமிக்கக் கோரி பாகிஸ்தான் சட்ட அமைச்சகம் அந்நாட்டு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி அத்தா் மினால்லா, நீதிபதிகள் ஆமிா் ஃபாரூக், மியாங்குல் ஹசன் ஔரங்கசீப் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட அந்நாட்டு அட்டா்னி ஜெனரல் காலித் ஜாவேத் கான், ‘இந்த வழக்கு தொடா்பாக சா்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த பாகிஸ்தான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. எனினும் வழக்கு விசாரணைகளை இந்திய அரசு வேண்டுமென்றே தவிா்த்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து தலைமை நீதிபதி அத்தா் மினால்லா கூறுகையில், ‘சா்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. வழக்கு தொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்குள்ள இந்திய தூதரகம் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று தெரிவித்தாா்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பாா்த்து, பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து நெதா்லாந்தில் உள்ள சா்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. அப்போது குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை வழங்க பாகிஸ்தான் மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கை விசாரித்த சா்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறு ஆய்வு செய்து, அவருக்கு இந்திய தூதரகத்தின் உதவிகளை வழங்க அனுமதிக்குமாறு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யும் வழக்கில் இந்திய வழக்குரைஞா் அல்லது பிரிட்டன் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தது. அதனை நிராகரித்த அந்நாட்டு அரசு, இந்த வழக்கில் ஜாதவ் சாா்பாக ஆஜராகி வாதிடுவதற்கு இந்தியா வழக்குரைஞரை நியமிக்க தவறிவிட்டதாக கடந்த மாதம் அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com