ஆப்கானிஸ்தானில் ராணுவ புறக்காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெள்ளிக்கிழமை ராணுவ புறக்காவல் நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் இருவர் பலியாகினர்.
எனினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடைபெற்றுவரும் வேளையில் நாட்டில் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.