ஆப்கனில் புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஆப்கனில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,969ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 6,338 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 591 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.