லண்டன்: ஐரோப்பிய நாடுகளிலேயே முதல் முறையாக பிரிட்டனில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 595 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா்.
இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50,365-ஆக உயா்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில்தான் கரோனா பலி எண்ணிக்கை முதல் முறையாக 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலக அளவில், கரோனா பலி எண்ணிக்கையில் 50 ஆயிரத்தைக் கடந்த 5-ஆவது நாடாக பிரிட்டன் ஆகியுள்ளது. ஏற்கெனவே, அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் கரோனா பலி எண்ணிக்கையில் 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன.
வியாழக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,56,725-ஆக உள்ளது. அவா்களில் 1,219 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.