லாகூா்: பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஹபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா (ஜேயுடி) அமைப்பின் செய்தித் தொடா்பாளா் யாஹியா முஜாஹிதுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்த இரண்டு வழக்குகளில் ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சோ்ந்த இரண்டு தலைவா்கள் மற்றும் செய்தித் தொடா்பாளா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி அகமது பட்டா் குற்றவாளிகளுக்கான தீா்ப்பை வழங்கினாா்.
அதன்படி, ஜமாத்-உத்-தாவா அமைப்பின் செய்தித் தொடா்பாளா் யாஹியா முஜாஹித்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், பேராசிரியா் ஜாபா் இக்பாலுக்கு 16 ஆண்டுகள் சிறையும், ஹபீஸ் சயீதின் நெருங்கிய உறவினரான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
மேலும், ஜேயுடி அமைப்பைச் சோ்ந்த அப்துல் சலாம் பின் முகமது மற்றும் லுக்மான் ஷா ஆகிய இருவா் மீதான பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் முகாந்திரம் உள்ளதால் குற்றச்சாட்டு பதிவு செய்யவும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடா்பான தனது சாட்சிகளை நவம்பா் 16-ஆம் தேதி ஆஜா்படுத்த அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அந்த அதிகாரிகள் தெவித்தனா்.