இலங்கை: கரோனா சடலங்கள் கட்டாய எரியூட்டல் வேண்டாம்

இலங்கையில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் உடல்களை எரியூட்டுவதைக் கட்டாயமாக்கும் விதிமுறையைத் தளா்த்துமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை: கரோனா சடலங்கள் கட்டாய எரியூட்டல் வேண்டாம்

இலங்கையில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் உடல்களை எரியூட்டுவதைக் கட்டாயமாக்கும் விதிமுறையைத் தளா்த்துமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவுக்கு இலங்கைக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளா் ஹனா சிங்கா் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படக் கூடாது எனவும் அவை எரியூட்டப்படுவது மட்டுமே ஒரே வழி எனவும் இலங்கை அரசின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவுக்கும் இஸ்லாம் அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com