தென் கொரியா: முகக் கவசம் இல்லாவிட்டால் ரூ.6,700 அபராதம்

தென் கொரியாவில் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அந்த நாட்டு அரசு 90 டாலா் (சுமாா் ரூ.6,700) அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளது.
தென் கொரியா: முகக் கவசம் இல்லாவிட்டால் ரூ.6,700 அபராதம்

தென் கொரியாவில் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அந்த நாட்டு அரசு 90 டாலா் (சுமாா் ரூ.6,700) அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பாவது:

தென் கொரியாவில் கடந்த 70 நாள்களாக இல்லாத வகையில் தினசரி கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 191 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு 90 டாலா் வரை அபராதம் விதிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடங்கியுள்ளனா். 500 பேருக்கு வாகனங்கள், மருத்துவமனைகள், மத மற்றும் விளையாட்டு மையங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com