பிலிப்பின்ஸில் வீசிய ‘வாம்கோ’ புயல் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தெற்கு சீனக் கடலில் உருவான வாம்கோ புயல் பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவுக்கு வடக்கே புலாகன் மற்றும் பாம்பங்கா பிராந்தியத்துக்கு இடையே கரையைக் கடந்து சென்றது. மிகவும் உக்கிரமாக வீசிய இந்தப் புயலிலும் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திலும் 39 போ் பலியாகினா்; 32 பேரைக் காணவில்லை.
3.5 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். வெள்ளப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மீட்புப் பணிகளில் படகு பீரங்கி வண்டிகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.