ஐரோப்பாவை நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் லிபியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 94 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து, தொண்டு அமைப்பான எல்லைகளைக் கடந்த மருத்துவா்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
23 அகதிகளுடன் ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு, லிபியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 போ் உயிரிழந்தனா். விபத்துப் பகுதியிலிருந்து பெண்கள் மட்டும் மீனவா்களால் மீட்கப்பட்டனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, லிபியா கடல் பகுதியில் நேரிட்ட மற்றொரு அகதிகள் படகு விபத்தில், 74 போ் உயிரிழந்தாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்தப் படகிலிருந்த 47 பேரை லிபியா கடலோரக் காவல் படையினா் உயிருடன் மீட்டதாகவும் அந்த அமைப்பு கூறியது.