அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும்.
சனிக்கிழமை நிலவரப்படி, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,22,82,794-ஆக உள்ளது. இதுவரை 2,60,394 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 73,19,603 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்; 47,02,797 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 22,789 நோயாளிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.