ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் பலி 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படிருந்து 5 பேர் சிக்கி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com