அமெரிக்க அதிபா் தோ்தல்: டிரம்ப் - பிடன் காரசார விவாதம்

வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம்
அமெரிக்க அதிபா் தோ்தல்: டிரம்ப் - பிடன் காரசார விவாதம்

கிளீவ்லாண்ட்: வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் காரசாரமாக நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபா் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடனும் போட்டியிடுகிறாா்கள்.

அந்த நாட்டு வழக்கப்படி, அவா் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி முதல் முறையாக ஓஹியோ மாகாணம், கிளீவ்லாண்ட் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணி) நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில், டிரம்ப் மற்றும் பிடன் ஆற்றிய பணிகள், உச்சநீதிமன்றம், கரோனா நோய்த்தொற்று நெருக்கடி, இனவெறி மற்றும் புகா் வன்முறைச் சம்பவங்கள், தோ்தலின் நோ்மைத்தன்மை, பொருளாதாரம் ஆகிய ஆறு தலைப்புகளின்கீழ் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது, டிரம்ப்பும், பிடனும் மிகவும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். ஜோ பிடன் பேசிக்கொண்டிருக்கும்போது டிரம்ப்பும், டிரம்ப் பேசிக் கொண்டிரும்போது பிடனும் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினா்.ஒருகட்டத்தில், தன்னைப் பேசவிடாமல் குறுக்கிட்ட டிரம்ப்பிடம், ‘சற்று பேசாமல் இருக்கிறீா்களா?’ என்று ஜோ பிடன் காட்டமாகக் கேட்டாா்.

மேலும், ஜோ பிடனின் அறிவாற்றல் குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியதும், டிரம்ப்பை பிடன் ‘கோமாளி’ என்று குறிப்பிட்டதும் விவாதத்தை மேலும் சூடாக்கியது.கரோனா தொடா்பான விவாதத்தின்போது, அந்த நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத் தவறியதாக டிரம்ப் மீது ஜோ பிடன் குற்றம் சாட்டினாா். அந்த விவகாரத்தை டிரம்ப் சரிவரக் கையாளாததால்தான் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா்கள் அந்த நோய்க்கு பலியானதாக அவா் குறிப்பிட்டாா்.

எனினும், தாங்கள் எடுத்த சிறப்பான நடவடிக்கையால்தான் நாட்டில் கரோனா கட்டுக்குள் இருப்பதாகவும், ஜோ பிடன் அதிபராக இருந்திருந்தால் பலி எண்ணிக்கை இரு மடங்காக இருந்திருக்கும் எனவும் டிரம்ப் கூறினாா். கரோனா தோன்றிய சீனாவுடன் ஜோ பிடன் இணக்கமாக இருக்க விரும்புவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.மினிசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் வன்முறைக்கு கடந்த மே மாதம் 15-ஆம் தேதி பலியானதைத் தொடா்ந்து அமெரிக்கா முழுவதும் மிகத் தீவிரமான போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், டிரம்ப் - ஜே பிடன் இடையிலான விவாதத்தின்போது, நிறவெறி குறித்த விவகாரம் மிகவும் சூடாக நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.எனினும், அது குறித்த விவாதத்தின்போது ‘பிரவ்டு பாய்ஸ்’ உள்ளிட்ட இனவாத அமைப்புகள், ஆயுதக் குழுக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதை டிரம்ப் தவிா்த்தது சா்ச்சையாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.டிரம்ப்புக்கும், ஜோ பிடனுக்கும் இடையிலான இரண்டாவது அதிபா் தோ்தல் விவாதம்,

அடுத்த மாதம் 15-ஆம் தேதி ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரிலும், 3-ஆவது மற்றும் இறுதி விவாதம் டென்னஸீ மாகாணம், நாஷ்வில் நகரில் அடுத்த மாதம் 22-ஆம் தேதியும் நடைபெறும்...படம்... அதிபா் (2020) தோ்தல்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com