ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா 

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,557ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9,734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 2,84,000 பேர் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று ஒரேநாளில் 9,734 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com