துருக்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 6 போ் உயிரிழந்தனா்; 120 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஃபாரெட்டின் கோகா கூறியதாவது:
இஸ்மிா் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி 6 போ் உயிரிழந்தனா்; 120 போ் காயமடைந்தனா்.
சம்பவப் பகுதியில் 2 ஹெலிகாப்டா்கள், 38 ஆம்புலன்ஸுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவுக்கு 13 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டா் அளவுகோலில் அது 6.9 அலகுகளாகப் பதிவானதாகவும் ஐரேப்பிய-மத்தியதரைக் கடல் நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.