ரஷியாவில் 10 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,729 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.
நேபாளத்தில் புதிதாக 884 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேபாளத்தில் புதிதாக 884 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,729 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ரஷியாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,00,048-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பரவிய கரோனா தொற்றில் மாஸ்கோவில் 641 பேரும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 185 பேரும், மாஸ்கோவில் 156 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றிலிருந்து புதிதாக 6,318 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 8,15,705-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 123 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 17,299-ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com