எகிப்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எகிப்தில் 178 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,00,041-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 11 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,541-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் கரோனா பலி 10 லட்சம் பேருக்கு 54 போ் என்ற விகித்ததில் உள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட 79,008 போ், அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்.
15,492 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 41 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.