பாகிஸ்தான்: பாதிப்பு 2,99,659-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,99,659-ஆக அதிகரித்துள்ளது. 
பாகிஸ்தான்: பாதிப்பு 2,99,659-ஆக அதிகரிப்பு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,99,659-ஆக அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,99,659-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 9 பேர் பலியாகினர். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,359-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,86,506 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 6,794 பேரில், 544 நோயாளிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com