ரஷியாவில் புதிதாக 5,363 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 128 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
நாட்டில் புதிதாக 5,363 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,46,370ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 128 பேர் உள்பட இதுவரை 18,263 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போதுவரை 8,62,373 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,08,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3.95 கோடி மாதிரிகளை பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 695 பேர் உள்பட இதுவரை 2,69,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.