
sing_0909chn_1
சிங்கப்பூா்: சிங்கப்பூரில், மேலும் 75 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் ஒருவருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
எஞ்சியவா்களில் 60 பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 14 பேரும் புதிய கரோனா நோயாளிகளில் அடங்குவா்.
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57,166-ஆக உயா்ந்துள்ளது.புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 56,461 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 48 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மிதமான அறிகுறிகுறிகளைக் கொண்டிருக்கும் 555 போ் தனிமை முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.