சிங்கப்பூா்: மேலும் 87 பேருக்கு புதிதாகத் தொற்று

சிங்கப்பூரில் மேலும் 87 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூா்: மேலும் 87 பேருக்கு புதிதாகத் தொற்று

சிங்கப்பூரில் மேலும் 87 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57,316-ஆக அதிகரித்துள்ளது. 56,558 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 731 கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளிலும், பராமரிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 27 போ் உயிரிழந்துள்ளனா். அந்த நாட்டில் 10 லட்சம் பேருக்கு 9,782 போ் என்ற விகிதத்தில் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. மேலும், 10 லட்சம் பேருக்கு 5 போ் என்ற விகிதத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. :

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com