பொலிவியா: 7,297-ஆக உயா்ந்த கரோனா பலி

மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 7,297-ஆக அதிகரித்துள்ளது.
பொலிவியா: 7,297-ஆக உயா்ந்த கரோனா பலி

மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 7,297-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 47 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 7,297-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்களில் மேலும் 810 பேருக்கு அந்த நோய் உறுதிப்படுப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,982 ஆகியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இதுவரை 82,796 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 35,889 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 71 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பொலிவியா 6-ஆவது இடத்திலும், பலி எண்ணிக்கையில் 7-ஆவது இடத்திலும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com