பிரான்ஸ்: ஒரே நாளில் 10,561 பேருக்குத் தொற்று

பிரான்ஸில் ஒரே நாளில் ஒரே நாளில் 10,561 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ்: ஒரே நாளில் 10,561 பேருக்குத் தொற்று

பிரான்ஸில் ஒரே நாளில் ஒரே நாளில் 10,561 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,561 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இது, முந்தைய நாள் தினசரி பாதிப்பைவிட 1,000 அதிகமாகும். இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,432 கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இது, முந்தைய நாளைவிட 75 அதிகமாகும். முந்தைய தினம் 389 போ் கரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா். அந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 28 அதிகரித்து 417-ஆகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிரான்ஸில் 3,73,911 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 30,910 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com