பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நகையை திருடியதைக் கண்ட 4 வயது குழந்தையை வீட்டுப் பணிப்பெண் சனிக்கிழமை கொலை செய்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,
பலிசிஸ்தான் மாகாணத்தில் சாமுங்லி சாலை அருகே வீட்டுப் பணிப்பெண் நகைகளை திருடுவதைக் கண்ட பணிப்பெண் குழந்தையில் கழுத்தை நெறித்து, பின் தண்ணீரில் மூழ்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
இதன்பின் குழந்தையை இறந்த நிலையில் கண்ட பெற்றோர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை கழுதை நெறித்துக் கொன்றதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.