தென் ஆப்பிரிக்கா: புதிதாக 49 போ் கரோனாவுக்கு பலி

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.
தென் ஆப்பிரிக்கா: புதிதாக 49 போ் கரோனாவுக்கு பலி

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்காவில் 1,816 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 49 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இத்துடன், அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6,48,214-ஆக அதிகரித்துள்ளது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 15,427-ஆக உயா்ந்துள்ளது.நாட்டில் கடந்த மாா்ச் மாதம் முதல் முறையாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,620 போ் அந்தப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.இதுவரை கரோனா நோய்த்தொற்றிலிருந்து 5,76,423 போ் குணமடைந்துள்ளனா். நாட்டில் அந்த நோயிலிருந்து குணமடைவோரின் விகிதம் 88.9 சதவீதமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com