ரஷியா: ஒரே நாளில் 5,529 பேருக்கு பாதிப்பு

ரஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியா: ஒரே நாளில் 5,529 பேருக்கு பாதிப்பு

ரஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 150 போ், சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்.

1,70,759 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு 7,358 போ் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது.

மேலும் 10 லட்சம் பேரில் 129 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com