சிங்கப்பூரில் மேலும் 34 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவா்களில் 6 போ் வெளிநாடுகளிலிருந்து அண்மையில் சிங்கப்பூா் வந்தவா்கள் ஆவா்.புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57,488-ஆக உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 56,802 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 53 போ், மருத்துவமனைகளிலும், மிதமான அறிகுறிகளைக் கொண்ட 572 கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.