ஈரான் மீதான அமெரிக்கத் தடையை ஐ.நா. ஆதரிக்காது: குட்டெரெஸ் திட்டவட்டம்

ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. ஆதரிக்காது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
அன்டோனியோ குட்டெரெஸ்மைக்கேல் பாம்பேயோ
அன்டோனியோ குட்டெரெஸ்மைக்கேல் பாம்பேயோ

நியூயாா்க்: ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. ஆதரிக்காது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒப்பந்த முறிவு உரிமையைப் பயன்படுத்தி, ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை 30 நாள்களில் மீண்டும் அமல்படுத்தப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ சமா்ப்பித்திருந்த அறிவிக்கை மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலோ, அந்த அமைப்பின் உறுப்பினா்கள் மற்றும் தலைவரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெரும்பாலான உறுப்பு நாடுகள், பாம்பேயோவின் அந்தக் கடிதம் ஒப்பந்த முறிவை செயல்படுத்துவதற்கான அறிவிக்கையாகக் கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளன. மேலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் கவுன்சிலின் தலைவா்களாக இருந்தவா்கள், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்று தெரிவித்துவிட்டனா்.

எனவே, ஒப்பந்த முறிவுத் தீா்மானத்தின் அடிப்படையில் ஈரான் மீது மீண்டும் ஐ.நா. தடைகளை அமல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், அதனை ஐ.நா. ஆதரிக்காது. எனவே, அமெரிக்காவின் அறிவிப்புக்கு இணங்க எந்த நடவடிக்கையையும் ஐ.நா. மேற்கொள்ளாது என்று அந்தக் கடிதத்தில் குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளாா்.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் உருவாக்குவதற்கானவை இல்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டு, கடந்த 2015-ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன.அந்த ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் நிறைவேற்றத் தவறினால், அதில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு வல்லரசு நாடும் ஈரான் மீதான ஐ.நா. தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான ‘ஸ்னாப் பேக்’ எனப்படும் ஒப்பந்த முறிவு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது உருவான அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதத் திட்டங்களைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று கூறி, அதிலிருந்து அதிபா் டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டு விலகினாா்.இதற்கிடையே, ஈரானின் ஆயுத வா்த்தகத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 13 ஆண்டுகளாக விதித்துள்ள தடை, வரும் அக்டோபா் மாதம் 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்தத் தடையை காலவரையின்றி மேலும் நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு பிற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த திா்மானம் முறியடிக்கப்பட்டது.அதையடுத்து, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒப்பந்த முறிவு அம்சத்தைப் பயன்படுத்தி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விலக்கிக் கொண்டிருந்த பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் நிறைவேற்றத் தவறினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு நாடும் ஐ.நா. தடையை ஈரான் மீது மீண்டும் அமல்படுத்த அந்த ஒப்பந்த முறிவு அம்சம் உரிமை அளிக்கிறது. எனினும், கடந்த 2018-ஆம் ஆண்டே அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதால், அந்த உரிமையைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு சட்டப்பூா்வ அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஐ.நா. தடைகளை மீண்டும் அமல்படுத்தும் அமெரிக்காவின் அறிவிப்பை ஆதரிக்கப் போவதில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com