இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்றுவதற்காக, அந்த நாட்டின் முக்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் ஃபஸல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிக் கூட்டணிக்கு ‘பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ என்று பெயரிடப்பட்டது.
மேலும், இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் தீவிர போராட்டம் நடத்தவும் அந்தக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது ென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.