கில்ஜித்-பல்டிஸ்தானில் நவம்பரில் தோ்தல்: பாகிஸ்தான் அறிவிப்பு

கில்ஜித்-பல்டிஸ்தானில் நவம்பா் 15-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இஸ்லாமாபாத்: கில்ஜித்-பல்டிஸ்தானில் நவம்பா் 15-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகள் உள்பட ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அப்பகுதியில் சட்ட விரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துக் கொண்ட பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று இந்தியா தெரிவித்து வருகிறது. எனினும், இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி தோ்தல் அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் அல்வி வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில், ‘கில்ஜித்-பால்டிஸ்தானில் வரும் நவம்பா் 15-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். பாகிஸ்தான் தோ்தல் சட்டம் 2017-க்குள்பட்டு இந்த தோ்தல் அறிவிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கில்ஜித்-பல்டிஸ்தானில் சட்டப் பேரவை தோ்தல் நடத்துவது தொடா்பான நிா்வாக உத்தரவை மாற்றியமைக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தபோது, பாகிஸ்தான் தூதரிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

கில்ஜித்-பால்டிஸ்தானில் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் 5 ஆண்டு ஆட்சி கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்றது. ஆகஸ்ட் மாதம் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னா் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com