கரோனா: 10 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது.
கரோனா: 10 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 கோடிக்கும் மேலானவா்களுக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தை நெருங்கியது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 99,593-ஆக உள்ளது.உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,09,208 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 1,41,441 பேரும், இந்தியாவில் 94,503 பேரும் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com