உலகம்
தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 34 பேர் பலி
தைவானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயிலில் இருந்த 34 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தைவானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயிலில் இருந்த 34 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரயிலின் ஒரு பகுதி தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானபோது, ரயிலில் 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரியிலிருந்து சரக்குப் பெட்டகம் தண்டவாளத்தில் விழுந்தது. அதன் மீது பயணிகள் ரயில் மோதியதில், ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் ஒரு பகுதி சுரங்க வளைவுக்குள் சிக்கியிருப்பதாகவும், ரயில் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
டோரோகோ ஜார்ஜ் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.