உலகம்
ஆர்ஜென்டினா அதிபருக்கு கரோனா தொற்று
ஆர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண மக்கள் தொடங்கி அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஆர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர் காய்ச்சல் மற்றும் லேசான தலைவலி ஏற்பட்ட பின்னர் கரோனா பரிசோதனையை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆர்ஜென்டினாவில் இதுவரை 23 லட்சத்து 73 ஆயிரத்து 153 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.