வங்கதேசத்தில் சரக்குக் கப்பலுடன் பயணிகள் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 34-ஆக அதிகரித்தது. அந்த நாட்டின் சீதலக்யா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நேரிட்ட பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வங்கதேச படகுகளின் உரிமையாளா்கள், தங்களது பயணிகளின் விவரத்தைப் பதிவு செய்வதில்லை. எனவே, இந்த விபத்தில் மேலும் சிலா் மாயமாகியுள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை.