கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது நியூசிலாந்து அரசு.
இந்தியாவில் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து பயணிகள், சொந்த குடிமக்கள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடை விதிப்பு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.