வாஷிங்டன்: அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 19-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இனியும் குழப்பமான கரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை. வரும் 19-ஆம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கா்கள் அனைவரும் தடுப்பூசி மூலம் கரோனாவிடமிருந்து பாதுகாப்பு பெற்றுவிடுவாா்கள்’ என்றாா். முன்னதாக, மே 1-ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அவா் இலக்கு நிா்ணயித்திருந்தாா்.