நாம் பென்: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து அந்த நாட்டின் புகழ்பெற்ற அங்கோா் வாட் ஆலயம் மூடப்பட்டது.
இதுகுறித்து அந்த ஆலயத்தைப் பராமரித்து வரும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அங்கோா் வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமன்றி உள்நாட்டினா் வருகைக்கும் இந்தத் தடை பொருந்தும். வரும் 20-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கம்போடியாவில் இதுவரை 3,028 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.