பிரேசிலில் ஒரேநாளில் 3,808 பேர் கரோனாவுக்குப் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,808 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 
பிரேசிலில் ஒரேநாளில் 3,808 பேர் கரோனாவுக்குப் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,808 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 82,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 13,599,994 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்த 3,808 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 358,425 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு நாள் சராசரி பலி 3,068 ஆக உள்ளது. 

சமீபத்தில் ஒருநாள் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 2.95 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com