வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 சிறுவா்கள் உள்பட 42 போ் உயிரிழந்தனா். திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 14 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்காக யேமன் வந்த அகதிகள், அங்கு நிலைமை சரியில்லாததால் நாடு திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.